Nehemiah 7

1மதில் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளர்களையும், பாடகர்களையும், லேவியர்களையும் ஏற்படுத்தினபின்பு, 2நான் என்னுடைய சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைவிட உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்த அரண்மனைத்தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.

3அவர்களை நோக்கி: வெயில் ஏறும்வரை எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளை அடைத்து தாழ்ப்பாள் போட்டு, எருசலேமில் குடியிருக்கிற காவலாளர்கள் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.

4பட்டணம் விசாலமும் பெரிதுமாக இருந்தது; அதற்குள்ளே மக்கள் குறைவாக இருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.

5அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்ப்பதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்ய, என்னுடைய தேவன் என்னுடைய மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முதலில் வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புத்தகம் அப்பொழுது எனக்கு கிடைத்தது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்:

6பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து, 7எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியேறினவர்களுமான இந்த தேசத்தின் ஆண்களாகிய இஸ்ரவேல் மக்களான மனிதர்களின் எண்ணிக்கையாவது:

8பாரோஷின் வம்சத்தினர்கள் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்கள். 9செபத்தியாவின் வம்சத்தினர்கள் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்கள். 10ஆராகின் வம்சத்தினர்கள் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்கள்.

11யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததியிலிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தினர்கள் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுபேர்கள். 12ஏலாமின் வம்சத்தினர்கள் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநான்குபேர்கள். 13சத்தூவின் வம்சத்தினர்கள் எண்ணூற்று நாற்பத்தைந்துபேர்கள். 14சக்காயின் வம்சத்தினர்கள் எழுநூற்று அறுபதுபேர்கள்.

15பின்னூவின் வம்சத்தினர்கள் அறுநூற்று நாற்பத்தெட்டுபேர்கள். 16பெபாயின் வம்சத்தினர்கள் அறுநூற்று இருபத்தெட்டுபேர்கள். 17அஸ்காதின் வம்சத்தினர்கள் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டுபேர்கள். 18அதோனிகாமின் வம்சத்தினர்கள் அறுநூற்று அறுபத்தேழுபேர்கள்.

19பிக்வாயின் வம்சத்தினர்கள் இரண்டாயிரத்து அறுபத்தேழுபேர்கள். 20ஆதீனின் வம்சத்தினர்கள் அறுநூற்று ஐம்பத்தைந்துபேர்கள். 21எசேக்கியாவின் சந்ததியான ஆதேரின் வம்சத்தினர்கள் தொண்ணூற்று எட்டுபேர்கள். 22ஆசூமின் வம்சத்தினர்கள் முந்நூற்று இருபத்தெட்டுபேர்கள்.

23பேசாயின் வம்சத்தினர்கள் முந்நூற்று இருபத்துநான்குபேர்கள். 24ஆரீப்பின் வம்சத்தினர்கள் நூற்றுப்பன்னிரண்டுபேர்கள். 25கிபியோனின் வம்சத்தினர்கள் தொண்ணூற்று ஐந்துபேர்கள். 26பெத்லகேம் ஊரைச்சேர்ந்தவர்களும், நெத்தோபா ஊரைச்சேர்ந்தவர்களும் நூற்று எண்பத்தெட்டுபேர்கள்.

27ஆனதோத்தூர் மனிதர்கள் நூற்று இருபத்தெட்டுபேர்கள். 28பெத்அஸ்மாவேத் ஊரைச்சேர்ந்தவர்கள் நாற்பத்திரண்டுபேர்கள். 29கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர்கள் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்கள். 30ராமா, காபா ஊர்களின் மனிதர்கள் அறுநூற்று இருபத்தொருபேர்கள்.

31மிக்மாஸ் ஊரைச்சேர்ந்தவர்கள் நூற்று இருபத்திரண்டுபேர்கள். 32பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர்கள் நூற்று இருபத்துமூன்றுபேர்கள். 33வேறொரு நேபோ ஊரைச்சேர்ந்தவர்கள் ஐம்பத்திரண்டுபேர்கள். 34மற்றொரு ஏலாம் வம்சத்தினர்கள் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநான்குபேர்கள்.

35ஆரீம் வம்சத்தினர்கள் முந்நூற்று இருபதுபேர்கள். 36எரிகோ வம்சத்தினர்கள் முந்நூற்று நாற்பத்தைந்துபேர்கள். 37லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் வம்சத்தினர்கள் எழுநூற்று இருபத்தொருபேர்கள். 38செனாகா வம்சத்தினர்கள் மூவாயிரத்துத் தொளாயிரத்து முப்பதுபேர்கள்.

39ஆசாரியர்களானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தினர்கள் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்கள். 40இம்மேரின் வம்சத்தினர்கள் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்கள். 41பஸ்கூரின் வம்சத்தினர்கள் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்கள். 42ஆரீமின் வம்சத்தினர்கள் ஆயிரத்துப் பதினேழுபேர்கள்.

43லேவியர்களானவர்கள்: ஒதியாவின் சந்ததிக்குள்ளே கத்மியேலின் மகனாகிய யெசுவாவின் வம்சத்தினர்கள் எழுபத்துநான்குபேர்கள். 44பாடகர்கள்: ஆசாபின் வம்சத்தினர்கள் நூற்று நாற்பத்தெட்டுபேர்கள். 45வாசல் காவலாளர்கள்: சல்லூமின் வம்சத்தினர்கள், அதேரின் வம்சத்தினர்கள், தல்மோனின் வம்சத்தினர்கள், அக்கூபின் வம்சத்தினர்கள், அதிதாவின் வம்சத்தினர்கள், சோபாயின் வம்சத்தினர்கள், ஆக நூற்று முப்பத்தெட்டுபேர்கள்.

46ஆலயப் பணியாளர்கள்: சீகாவின் வம்சத்தினர்கள், அசுபாவின் வம்சத்தினர்கள், தபாகோத்தின் வம்சத்தினர்கள், 47கேரோசின் வம்சத்தினர்கள், சீயாவின் வம்சத்தினர்கள், பாதோனின் வம்சத்தினர்கள், 48லெபானாவின் வம்சத்தினர்கள், அகாபாவின் வம்சத்தினர்கள், சல்மாயின் வம்சத்தினர்கள், 49ஆனானின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள், காகாரின் வம்சத்தினர்கள்,

50ராயாகின் வம்சத்தினர்கள், ரேத்சீனின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள், 51காசாமின் வம்சத்தினர்கள், ஊசாவின் வம்சத்தினர்கள், பாசெயாகின் வம்சத்தினர்கள், 52பேசாயின் வம்சத்தினர்கள், மெயுநீமின் வம்சத்தினர்கள், நெபிஷசீமின் வம்சத்தினர்கள்,

53பக்பூக்கின் வம்சத்தினர்கள், அகுபாவின் வம்சத்தினர்கள், அர்கூரின் வம்சத்தினர்கள், 54பஸ்லீதின் வம்சத்தினர்கள், மெகிதாவின் வம்சத்தினர்கள், அர்ஷாவின் வம்சத்தினர்கள், 55பர்கோசின் வம்சத்தினர்கள், சிசெராவின் வம்சத்தினர்கள், தாமாவின் வம்சத்தினர்கள், 56நெத்சியாகின் வம்சத்தினர்கள், அதிபாவின் வம்சத்தினர்கள்,

57சாலொமோனுடைய வேலைக்காரர்களின் வம்சத்தினர்கள்: சோதாயின் வம்சத்தினர்கள், சொபெரேத்தின் வம்சத்தினர்கள், பெரிதாவின் வம்சத்தினர்கள், 58யாலாவின் வம்சத்தினர்கள், தர்கோனின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள், 59செபத்தியாவின் வம்சத்தினர்கள், அத்தீலின் வம்சத்தினர்கள், பொகெரேத் செபாயிமிலுள்ள வம்சத்தினர்கள், ஆமோனின் வம்சத்தினர்கள். 60ஆலய பணியாளர்களும், சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தினர்களும் சேர்ந்து முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்கள்.

61தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர்கள் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்: 62தெலாயாவின் வம்சத்தினர்கள், தொபியாவின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள், ஆக அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்கள். 63ஆசாரியர்களில் அபாயாவின் வம்சத்தினர்கள், கோசின் வம்சத்தினர்கள், கிலேயாத்தியனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்களுடைய வம்சத்தின் பெயரிடப்பட்ட பர்சிலாயின் வம்சத்தினர்கள்.

64இவர்கள் தங்களுடைய வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு ஒதுக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள். 65ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் வரும்வரை, அவர்கள் மகா பரிசுத்தமானதை சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.

66சபையார்கள் எல்லோரும் சேர்ந்து நாற்பத்திரண்டாயிரத்து முந்நூற்று அறுபதுபேர்களாக இருந்தார்கள். 67அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேர்களான அவர்களுடைய வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், இருநூற்று நாற்பத்தைந்து பாடகர்களும், பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.

68அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து. 69ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.

70வம்சத்தலைவர்களில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா ஆயிரம் தங்கக்காசையும், ஐம்பது கலங்களையும், ஐந்நூற்று முப்பது ஆசாரிய உடைகளையும் பொக்கிஷத்திற்குக் கொடுத்தான். 71வம்சத்தலைவர்களில் சிலர் வேலையின் பொக்கிஷத்திற்கு இருபதாயிரம் தங்கக்காசுகளையும், இரண்டாயிரத்து இருநூறு ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள். 72மற்ற மக்கள் இருபதாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரம் ராத்தல் வெள்ளியையும், அறுபத்தேழு ஆசாரிய உடைகளையும் கொடுத்தார்கள்.

ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும், மக்களில் சிலரும், ஆலய பணியாளர்களும், இஸ்ரவேலர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் வம்சத்தினர்கள் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.

73

Copyright information for TamULB